திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. மாநில அரசு கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும், கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என அரசு கருதுகிறது.
எனவே கேரளா அரசு சார்பில் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தற்போதுள்ள ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு தேவையில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஊரடங்கு தேவையில்லை என்பது குறித்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க இனி முழு ஊரடங்கு அமல்படுத்த அவசியமில்லை. முழு ஊரடங்கால் மாநிலத்தின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியே சென்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்பதோடு தொற்று ஏற்பட்டவர்களின் சொந்த செலவில் தனி முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள் என முதல்வர் பினராயி விஜயன் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.