பெங்களூரு:-
நடிகர் அஜீத்குமாரை கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத்நாராயண் பாராட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நகரம் முழுவதும் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியை நேற்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கூறிய துணை முதல்வர் அஸ்வத் நாராயணன்:-
நடிகர் அஜீத்குமாரை வழிகாட்டியாக கொண்ட தக்ஷா (Team Dhaksha) குழுவினருக்கு பாராட்டுக்கள். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ட்ரோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது போன்ற ட்ரோன்களை உருவாக்கி அவற்றின் மூலமாக பெரிய அளவிலான பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதை ரக்ஷா குழுவினர் எளிமையாக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ்-க்கு எதிராக போராடும் இந்த இக்கட்டான சூழலில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை காலம் நிரூபித்துள்ளது என்று கூறினார்.