இந்தியா

தகாத உறவு…. பணம்….பெண் பல் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா:

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் பல் மருத்துவர் ஒருவர் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த பல் மருத்துவர் சோனா(30)கணவரை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இவர் தனது மருத்துவமனையை மறுவடிவமைப்பு செய்யும் போது கட்டுமானத் துறையில் பணிபுரியும் மகேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

ALSO READ  மோடி முதலிடம் - டுவிட்டரில் 7 கோடி பாலோயர்களை கடந்த மோடி..!

இருவரும் 2 ஆண்டுகள் லிவிங் டு கெதரில் இருந்தனர். மருத்துவமனையின் மறுவடிவமைப்பு வேலையை முடிக்க, ரூ.7 லட்சம் பேசியிருந்த நிலையில், ரூ.22 லட்சம் பணத்தை மகேஷ் வாங்கியதாக தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது .

இதனையடுத்து சோனா மகேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து சோனாவின் தந்தை ஜோஸ் இருவரையும் வைத்து பேசியிருக்கிறார். ஆனால் பேச்சுவார்த்தை தகராறில் முடிந்தது.அதனைத் தொடர்ந்து சோனாவின் மருத்துமனைக்கு சென்ற மகேஷ் அவரை அங்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற சோனாவை மகேஷ் குத்தி கொலை செய்தார்.

ALSO READ  கொரோனா பரவல்: பி.எஃப்.புதிய விதிமுறைபடி இனி பணம் எடுக்கலாம்

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மகேஷ்-ஐ தடுத்து நிறுத்தனர். ஆனால் தான் போலீஸில் சரணடைய உள்ளதாக கூறி புறப்பட்ட மகேஷ் பின்னர் தலைமறைவானார், அவரை தீவிரமாக தேடிய போலீஸார் மகேஷ்-ஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு-HAL

naveen santhakumar

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கடன்- அள்ளிக் கொடுக்கும் வங்கிகள்!

naveen santhakumar

‘சீன வைரஸ்’ என்று அழைக்க வேண்டாம்… இந்தியாவிடம் சீனா வேண்டுகோள்…

naveen santhakumar