தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த 1983ம் ஆண்டு கார் உற்பத்தியை துவங்கியது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விலை, மைலேஜ் என்ற இரு அஸ்திரங்களை வைத்து சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்தியது.
பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள், வலுவான சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு போன்றவற்றுடன் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் மாருதி கார்களுக்கு எப்போதுமே முதலிடம் இருந்து வருகிறது. இதனால், விற்பனையில் மாருதி சுஸுகி கொடி கட்டி பறக்கிறது.
இந்த நிலையில், கார் வர்த்தகத்தை மாருதி நிறுவனம் துவங்கி 37 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை 2 கோடி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.