ராஜ்கோட்
குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் மற்றும் வதோதரா நகர முக்கிய சாலையோரங்களில் அமைந்துள்ள அசைவ ஓட்டல்கள், இறைச்சி, முட்டை கடைகளை உடனடியாக அகற்ற அந்நகராட்சி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகராட்சி ஆளும் கட்சியான பாஜகவசம் இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் வாய்மொழியாக புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாய்மொழி உத்தரவின்படி ராஜ்கோட் நகரின் முக்கிய சாலைகளில் அமைந்துள்ள அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் முட்டை கடைகள் மற்றும் அசைவம் சம்மந்தப்பட்ட அனைத்து கடைகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
அசைவம் சம்மந்தப்பட்ட அனைத்து கடைகளும் பொதுமக்களின் பார்வைக்கு தென்படாத இடங்களில் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி உத்தரவை உடனடியாக செயல்படுத்துமாறும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகராட்சி ஆளும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி இருந்து வருகிறது. நாடு முழுவதிலும் பாரதீய ஜனதா கட்சியின் “இறைச்சிக் கொள்கை” தான் பேசுபொருளாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.