புதுடெல்லி:-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூலை 31 முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வு முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பின்பற்ற வேண்டிய மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்க ளை திறக்கலாம்.
இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கான தடை விலக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களிலும் மக்கள் வெளியில் நடமாடலாம்.
பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடரும்.
நீச்சல் குளங்கள், மதுபானக் கடைகள் திறப்புக்கான தடை தொடரும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் இயங்கலாம்.
நீச்சல் குளங்கள், சினிமா கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.