தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான (National Register of Citizens) பணிகள் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.
நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார்.
முதலில், டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தொடங்க உள்ளது. அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற உள்ளன.
மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் அன்றைய தினம் பதிவட்டில் இடம் பெற உள்ளதாகவும் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் பதிவேட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் கணக்கெடுப்பு என்பது வழக்கமான நடைமுறைதான் என்பதை உணர்த்தும் வகையில் நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் இருந்து இப்பணி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.