இந்தியா

கல்யாண கனவுகளுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓசூர்:

தனது திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா (24). இவர் பெங்களூர் மாதேவபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் வசித்து வந்தனர்.

ALSO READ  இங்கிலாந்து மக்களை அச்சுறுத்திய கொலையாளியை கூட விட்டு வைக்காத அரக்கன் கொரோனா :

இந்தநிலையில் ஜமுனாவுக்கும், திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மொபட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் திருப்பத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

ஓசூர் அருகே குமுதேப்பள்ளி என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் ஜமுனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

ALSO READ  'மிக் 29கே' போர் விமானம் கடலில் விழுந்து விபத்து!

அவரது தாயார் வனிதாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanın ən yaxşı bukmeker kontor

Shobika

இந்தியாவில் வேகமாக பரவும் : புதியவகை கொரோனா – ஐசிஎம்ஆர் தகவல்

naveen santhakumar

Mostbet Приложение Установить Приложение Mostbet Мостбет Для Ios И Androi

Shobika