இந்தியா

பாஜக இரட்டை இலக்கத்தைக் கூட தாண்டாது…! பிரசாந்த் கிஷோர் சவால்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கத்தை கூட தாண்டாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும்  நிலையில்  இந்த முறை மேற்கு வங்கத்தை பாஜக பிடிப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல எம்.பி எம்.எல்.ஏக்கள் தன் கட்சியில் இணைத்து வருகிறது பாஜக.

திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளார் அக்கட்சியின் முக்கிய தலைவர் சுபேந்து  அதிகாரி ஒருவர். இவர் ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர்  பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற்று முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தி வருகிறார்.

ALSO READ  கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு !

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரின் வருகையின் காரணமாக பல தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது என திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் “மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை கடப்பது  சாத்தியமே இல்லை, இந்த ட்விட்டை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் பாஜக இரட்டை இலக்கத்தை கடந்தால் நான் ட்விட்டரை  விட்டு விலகி விடுகிறேன்” என கூறியுள்ளார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதலமைச்சர் மக்களிடம் OLX ல் பணமோசடி !

News Editor

கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி..!

News Editor

ஒடிசாவில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சரியமூட்டும் அரிய தங்க நிற ஆமை!… 

naveen santhakumar