பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்து பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கர்நாடக, உத்திரகாண்ட உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்திள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்றாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை வித்தித்துள்ளது.
இந்நிலையில்தான் இன்று புதுசேரி மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி, அனைத்து துறை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி. சனிபெயர்ச்சி விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. தற்போது திருநள்ளார் கோவிலில் விதி முறைகளை பின்பற்றி பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல நடைபெறும். அதற்கும் எந்த வித தடையும் கிடையாது. புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை. அதேசமயம் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகம், கர்நாடக, ராஜஸ்தான் மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது