பஞ்சாப்:-
ஆகஸ்ட் 2 (வரும் திங்கட்கிழமை ) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பஞ்சாப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு தடை நீடித்து வருகிறது. அதேசமயம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும், இதனை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு பின் அனைத்து வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க கூறிய முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்வது குறிப்பிடதக்கது.