புதுச்சேரி:-
புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை காரணமாக நாடு முழுவதும் கடந்தஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இடையே பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் 2ஆவது அலை காரணமாக மீண்டும் பள்ளி/ கல்லூரிகள் மூடப்பட்டன.
இதையடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.
இதனிடையே புதுச்சேரியில் நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முழுவதுமாக குறையாததால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார். பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.