மும்பை:
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார்.
ஃஎப்ஐசிசிஐ நிர்வாக குழு கூட்டத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சக்திகாந்ததாஸ் பேசினார்.அதில் “பொருளாதாரம் முழுமையாக மீளவில்லை, நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு தான், முதல் காலாண்டில், கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தியது. சில துறைகளில், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காணப்பட்ட பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், பொருளாதாரம் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக உயரும். சில துறைகளில் காணப்பட்ட முரண்பாடுகள், எளிமைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது”.
மேலும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார். இதனால், இந்தியப் பங்கு சந்தை வெகுவாக உயர்வதாக குறிபிட்ட அவர், தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது என்றார். அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் உதவிகள் தாரளமாக கிடைப்பதாக அவர் கூறினார்.என்று அவர் பேசினார்.