மும்பையில் மாடல் அழகி ஒருவர் ரயிலில் திருடிய பணத்தை கொண்டு அப்பார்ட்மென்ட் ஒன்றை விலைக்கு வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் மும்பையின் புறநகர் ரயில் நிலையங்களில் பெண்களிடம் அடிக்கடி நகைகள் பணம் ஆகியவை திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனை தடுக்கும் பொருட்டு தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் பர்தா அணிந்த பெண் ஒருவர் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.
மேலும் அது ஏற்கனவே நன்கு தெரிந்த முகம் என்பதை கண்டு பிடித்த காவல்துறையினர், ரகசியமாக காத்திருந்து அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் யாஸ்மின் என்பதும், அவர் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடன அழகியாக பணியாற்றியவர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயிலில் திருடிய பணம் நகைகள் ஆகியவற்றை கொண்டு, மும்பையில் அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான நகைகள், பணங்கள் மீட்கப்பட்டுள்ளன.