தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார்.
அதன் பின் பேசிய அவர் “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் சென்றாலும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது எனக் குற்றம் சாட்டினார். குறிப்பாக தனது பதவிக்குக் கூட உரிய மரியாதை தராமல் தேவஸ்தான அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.
அதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஆந்திர சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்தன் ரெட்டி, ரோஜாவின் முறையீடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.