தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட இருக்கின்ற நிலையில் பல மாநிலங்களில் திடீரென கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 8 மாநிலங்களில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4 மாநில கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு கவர்னராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.
- மிசோரம் மாநில கவர்னராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹரியானா கவர்னராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திரிபுரா கவர்னராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஹிமாச்சலபிரதேச கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா,ஹரியானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக மத்திய மந்திரி தாவர்ச்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மிசோரம் மாநில கவர்னராக ஹரிபாபு கம்பாம்பதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மத்தியபிரதேச கவர்னராக மங்குபாய் ஜகன்பாய் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இமாச்சலபிரதேச கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.