ஜெனிவா:-
WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சார்ந்த ஹிரோகி (Hiroki Nakatani) உள்ளார்.
இந்நிலையில் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி முறையில் நடைபெறும்.
இதற்கான பரிந்துரைக்கு 194 உறுப்பினர் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் செயற்குழு கூட்டத்தை ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்கி நடத்துவார்.
34 உறுப்பினர்களை கொண்ட செயற்குழுவின் தலைவர் என்ற முறையில் உலக சுகாதார நிறுவன அசெம்பிளியின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும்.