தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சிலை கலாச்சாரம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் கூட சர்தார் வல்லபாய் படேலுக்கு மிக உயரமான சிலையை வைத்து மத்திய அரசு சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பிரமாண்டமாக ஹனுமான் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. 215 மீட்டர் உயரத்தில் உருவாக இருக்கும் இந்த சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் வைக்கப்பட உள்ளது. இந்த சிலையை வைக்க மொத்த செலவு ரூபாய் 1200 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி ஆனந்த் சரஸ்வதி என்பவர் இந்த ஹனுமான் ஜென்மபூமி டிரஸ்ட்-ன் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் ஹனுமான் சிலை ரூபாய் 1200 கோடி செலவில் வைக்க உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.