மதுரை :
ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த போது விபத்தில் சிக்கிய தவசி, தொடர்ந்து ஊரடங்கால் படப்பிடிப்பின்றி முடங்கினார்.இதற்கிடையில் புற்று நோய் தீவிரம் அடைந்ததால் தவசியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு,பெரிய மீசையுடன் நடித்து வந்த நடிகர் தவசி உடல் மெலிந்து மீசையின்றி பரிதாபமாக காட்சி அளிக்கின்றார்.புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
இவர் தற்போது மதுரை நரிமேட்டில் உள்ள திமுக MLA சரவணனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரை உலகினர், தொழில் நுட்பகலைஞர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், கருப்பன், ரஜினிமுருகன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடத்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.அதேபோல் நடிகர் சூரி தவசிக்கு ரூ.20,000 மற்றும் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்குவதாக கூறினார்.
மேலும் நடிகர் தவசிக்கு வேறு எந்த உதவி வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார். மதுரையில் சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் நடிகர் சௌந்தராஜன் அவர்களும் ரூ.10,000 நிதியுதவி வழங்கினார்.