உத்தரபிரதேசத்தில் கள்ள காதல் ஜோடியின் மூக்கை கிராம மக்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபைசாபாத் நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ள காதல் இருந்து வந்துள்ளது.
வெவ்வேறு மதங்களைச் சார்ந்த இவர்களின் காதல் விவகாரம் வெளியில் தெரிய வர, அந்த பெண்ணை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். எனினும் அந்த ஜோடி அதனை கண்டுகொள்ளாமல் தங்களது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இளைஞர் தனது காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றபோது அந்த பெண்ணின் மாமனார் மற்றும் அந்த கிராம மக்கள் இணைந்து அவர்களை தாக்கினர்.
பின்னர் இருவரின் மூக்கையும் அறுத்துள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.