அரசியல் தமிழகம்

ஸ்டாலினுக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகள்- மாநில அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிராக இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

Image result for தமிழகத்தை

முதல்வர் எடப்பாடி சார்பாக நகர அரசு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அன்மையில் பேசிய திரு.ஸ்டாலின் தமிழகத்தை மத்திய அரசு எவ்வாறு நல்லாட்சி குறியீட்டில் முதன்மை மாநிலமாக தேர்ந்தெடுத்தது என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் தமிழகத்தை எவ்வாறு “பொதுமக்கள் பாதுகாப்பு” ல் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்க முடிந்தது. இங்கே தான் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளது எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலே தான் பல பொதுமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.

ALSO READ  7 ஸ்டார் ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு - பலர் மருத்துவமனையில் அனுமதி

எங்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. அதுமட்டுமல்ல இந்த மாநிலம் தான் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் இரண்டாமிடத்தில் உள்ளது. இதில் எங்கே யாருக்கு பாதுகாப்பு உள்ளது என சரமாரியாக விமர்சித்தார்.

நேற்றைய (ஜன. 28) முரசொலியில் ஸ்டாலினின் அறிக்கை வெளியாகி உள்ளது.

ALSO READ  சென்னை மழை - யார் இந்த திருப்புகழ் ஐஏஎஸ் …!

ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் CAA க்கு எதிராக “கோலம் போராட்டம்” நடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இது குறித்த செய்தி முரசொலியில் கடந்த டிசம்பர் 30 அன்று பிரசுரமானது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தற்கொலை தீர்வல்ல -நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

News Editor

ரஜினி பற்றி பேச தொலைகாட்சிகள் பணம் தர வேண்டும்… பிரபல நடிகர் கிண்டல் !!!!!

naveen santhakumar

மாணவர்களுக்காக ராமதாஸ் வைத்த அதிரடி கோரிக்கை!

naveen santhakumar