அரசியல்

ஒரே நாளில் 11 லட்சம் பேர்… ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு பவரா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் மிஸ்டுகால் திட்டம் மூலம் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியின் 70 தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து பிப்ரவரி 11ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் தொடர்ந்து 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் வெற்றி நிலவரங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றன.

ALSO READ  மருத்துவமனையிலிருந்து தப்ப முயன்ற சிவசங்கர் பாபா கைது…!

அந்தக் கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் மிஸ்டுகால் திட்டம் மூலம் தங்களது இணைப்பை உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 11 லட்சம் மக்கள் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

Admin

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரங்கள் பழைய இரும்புக்கு விற்பனை

Admin

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு !

News Editor