கடந்த 14-ம் தேதி சென்னையில் துக்ளக் 50-வது ஆண்டு விழா நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை மாநாடு குறித்து சில சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ரஜினிக்கு எதிராக வழக்கையும் பதிவு செய்தன.
மேலும், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்த நிலையில் தன்னுடைய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார் ரஜினி.
போயஸ் கார்டன் இல் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு நடைபெற்ற மூடநம்பிக்கை மாநாடு குறித்து, ஆதாரமற்ற கருத்துக்கள் எதையும் தான் தெரிவிக்கவில்லை .இதனால், மன்னிப்புக் கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ரஜினியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் பழைய விஷயங்களை பேசி என்ன புண்ணியம் இதனால் ரஜினிக்கு என்ன பிஎச்டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள் என கொந்தளித்துள்ளார்