இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது.
அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முகமது யூசப் மத்திய அரசுகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.