அறிவியல் கண்காட்சி ஒன்றை கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தொடங்கி வைத்தார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில், பிர்லா தொழில்நுட்ப காட்சியகத்தில் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், 1910 அல்லது 1911 ஆண்டுகளில்தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் நம் தேசத்தின் இதிகாசங்களை ஆழ்ந்து படித்தால் ராமாயண காலத்திலேயே ஆகாய விமானங்களுக்கு நிகரான வாகனங்கள் இருந்தன என்பது புரியும். ராமாயண காலத்திலேயே விமானங்களைப் போன்ற பறக்கும் சாதனங்கள் இருந்ததாகவும்,
மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் தெரிவித்தார். உலக நாடுகள் இந்தியாவைப் புறக்கணித்துவிட முடியாது என்றார்.
இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் அறிவியல் பின்புலத்தில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சிலர் ராமரை புராண கதாபாத்திரம் என்பதாகவும், அதை தன்னால் ஏற்க முடியாது என்றும் மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.