புதுச்சேரி:-
புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது. பா.ஜ.க.வினர் மீதி ரெட்டியார்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
பாஜகவுக்கு 2 அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் பதவிதான் என்பதில் உறுதியாக இருந்தார் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி. இதன்படி சபாநாயகர் பதவி பாஜகவுக்கு கிடைத்துவிட்டது.
இந்நிலையில், எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்ற தகவல் வெளியானது. இதனால் கொதித்து போன ஜான்குமாரின் ஆவரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, பாஜக அலுவலகத்தின் கேட்டையும் அடித்து உடைத்து, பேனர்களை கிழித்து எறிந்து துவம்சம் செய்தனர்.
மேலும், பாஜக தலைமையை கண்டித்தும், ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என கோரியும் கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியுல் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.