சம்பல்:
உத்தர பிரதேசத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசிய சமாஜ்வாதி எம்.பி., மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது.
ஆப்கனை தலிபான் ஆக்கிரமித்ததை இந்திய சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக சமாஜ்வாதி எம்.பி. ஷபிக்யுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து ஷபிக்யுர் ரஹ்மான் மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் உத்திர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்களிடையே மதம், மொழி, இனம், பிறப்பு ஆகியவை சார்ந்த வெறுப்புணர்வை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஷபிக்யுர் ரஹ்மான் கூறியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்ட சமாஜ்வாதி பிரமுகர்கள் மீதும், தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஷபிக்யுர் ரஹ்மான் கூறியுள்ளதாவது:
“ஆப்கனை, ரஷ்யா அல்லது அமெரிக்கா ஆளக் கூடாது. மண்ணின் மைந்தர்களான தலிபான்களே ஆள வேண்டும் என அந்நாட்டு மக்கள் கருதுவதாகத்தான் கூறினேன்.என் கருத்து தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து, நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்.”என்று அவர் கூறியுள்ளார்.