அரசியல்

“சக்தி வாய்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் ” … ஆளுநர் புகழாரம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சக்திவாய்ந்த முதலமைச்சர் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி படிப்பில், பல துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார். மேலும், இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு நீங்கள் மருத்துவராக பணியாற்றும்போது நீங்கள் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; அங்கு சேவையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ALSO READ  தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும்; மு.க ஸ்டாலின் பரப்புரை!

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர். என். ரவி, இந்திய அளவில் சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாக பாராட்டி பேசினார். ”சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே” என்று தொடக்கத்தில் கூறியபோது அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஆர்.என்.ரவி, ” மருத்துவ மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் இந்த பட்டம் சாத்தியமாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளது எனக்குறிப்பிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை !

News Editor

மக்கள் நீதி மையத்திற்கு ரஜினியிடம் ஆதரவு கேட்ட பிரபல இயக்குநர்..!

News Editor

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் இரண்டாவது முறையாக தேர்வு:

naveen santhakumar