தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பத்து கட்சிகள் அங்கம் வகித்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, கூட்டணியிலிருந்து விலகியது. இந்நிலையில், எந்தெந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பது உள்ளிட்டவை குறித்து திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் இன்று இரவு 7 மணிக்கு அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.