விளையாட்டு

மொதல்ல தோனி.. இப்போ இவரு.. என்ன பண்ணாரு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் திசரா பெரேரா அந்நாட்டு ராணுவ பணியில் இணைந்துள்ளார். விளையாட்டு துறையில் உள்ள வீரர்கள் அரசுப்பணியிலும், மற்ற தொழிலும் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தாய் நாட்டின் ராணுவ பணியில் ஈடுபடுவது என்பது மிகவும் அரிதான விஷயம் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ராணுவ பணியில் ஈடுபட்டு வந்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ALSO READ  ஐ.பி.எல் போட்டியின் வீரர்கள் தேர்வு; ஏலம் தேதியை அறிவித்த நிர்வாகம்..!

இந்நிலையில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் திசரா பெரேரா அந்நாட்டு ராணுவத்தின் கஜாபா ரெஜிமன்ட் பிரிவில் மேஜராக பணியில் சேர்ந்துள்ளார். அவர் ராணுவத்தின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின் பேரிலேயெ தன்னை ராணுவத்தில் இணைத்துள்ளார். இதுகுறித்து திசரா பெரேரோ கூறுகையில், “ராணுவத்தில் பணியாற்றுவது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் எனவும், கிரிக்கெட்டுக்கும், இராணுவத்துக்கும் தொடர்ந்து சேவை செய்வேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடர் தோல்வி..கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டூ பிளிஸ்சிஸ்

Admin

இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

News Editor

ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் :

Shobika