இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் திசரா பெரேரா அந்நாட்டு ராணுவ பணியில் இணைந்துள்ளார். விளையாட்டு துறையில் உள்ள வீரர்கள் அரசுப்பணியிலும், மற்ற தொழிலும் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தாய் நாட்டின் ராணுவ பணியில் ஈடுபடுவது என்பது மிகவும் அரிதான விஷயம் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ராணுவ பணியில் ஈடுபட்டு வந்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் திசரா பெரேரா அந்நாட்டு ராணுவத்தின் கஜாபா ரெஜிமன்ட் பிரிவில் மேஜராக பணியில் சேர்ந்துள்ளார். அவர் ராணுவத்தின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின் பேரிலேயெ தன்னை ராணுவத்தில் இணைத்துள்ளார். இதுகுறித்து திசரா பெரேரோ கூறுகையில், “ராணுவத்தில் பணியாற்றுவது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் எனவும், கிரிக்கெட்டுக்கும், இராணுவத்துக்கும் தொடர்ந்து சேவை செய்வேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.