நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
வெல்லிங்டனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர். பிரித்வி ஷா 16 ரன்களிலும், அடுத்த களமிறங்கிய புஜாரா 11 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 2 ரன்களிலும் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், விகாரி 7 ரன்களிலும் வெளியேற இந்திய அணி தேநீர் இடைவேளையில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. ரகானே 38 ரன்களிலும், ரிஷப் பண்ட் 10 ரன்களிலும் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
முதல் நாளில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது நாளில் நாளிலாவது மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.