தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 3 டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்க தாமதமானது.
மழை நின்ற பின் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதனால் போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாயினர். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை(செவ்வாய் கிழமை) இந்தூரில் நடைபெற உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.