விளையாட்டு

எனக்கே ரெட் கார்டா…. நடுவரை தாக்கிய கால்பந்து வீரர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எனக்கே ரெட் கார்டா…. நடுவரை தாக்கிய கால்பந்து வீரர்

ஜெர்மனியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் கால்பந்து வீரர் ஒருவர் ரெட் கார்டு கொடுத்த நடுவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் எப்.எஸ்.வி மியும்ஸ்டர் அணி வீரர் ஹெஸ்லி விளையாடும்போது விதிகளை மீறி விளையாடியதாக சக வீரர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆட்டத்தின் நடுவர் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்தார். மேலும் அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டார்.

ALSO READ  மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் :

ஆனால் நடுவர் இந்த நடவடிக்கைக்கு கடுப்பான ஹெஸ்லி அவரிடம் வாக்குவாதம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் முகத்தில் கடுமையாக தாக்கினார்.

இதனை சற்றும் எதிர்பாராத நடுவர் நிலைகுலைந்து போனார். உடனடியாக மற்ற வீரர்கள் நடுவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ALSO READ  நியூசிலாந்து அணியை பழிதீர்த்த இந்திய அணி

இது குறித்து விசாரணை நடத்திய கால்பந்தாட்ட நிர்வாகிகள் ஹெஸ்லிக்கு மூன்றாண்டுகள் தடையும்,அவரது அணிக்கு ஆறு மாதங்கள் தடை மற்றும் 553 டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்

Admin

மீண்டும் சொதப்பிய இந்திய அணி… கணக்கு தீர்த்த நியூசிலாந்து

Admin