விளையாட்டு

டென்னிஸில் மீண்டும் சானியா மிர்சா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

4 வருடங்களுக்கு பிறகு இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மீண்டும் களம் இறங்க உள்ளார்.

டென்னிஸ் போட்டிகள் என்றாலே இந்தியாவின் சானியா மிர்சாவை நினைக்காமல் நம்மால் கடந்து போக முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த 2016 ஆம் ஆண்டு கடைசியாக பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடினார்.

அதன் பின் குழந்தை பெற்றுக் கொண்ட சானியா மிர்சா மூன்று வருடங்கள் உலகை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் டென்னிஸ் விளையாட வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்திய சானியா மிர்சா தன் உடல் எடையை குறைப்பதிலும் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப போதிலும் முழு முயற்சி காட்டினார்.

ALSO READ  தகுதியற்ற அணி….கடுமையாக சாடினார் கௌதம் கம்பீர்…..

இந்த நிலையில் பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா அடங்கிய ஐந்து பேர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, ருதுஜா போஸ்லே, கர்மான் கவுர் தாண்டி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டு முதல் சானியா மிர்சாவை மீண்டும் டென்னிஸ் களத்தில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 நாடுகளில் ‘சூப்பர் சீரிஸ்’ ஒருநாள் தொடர்- கங்குலியின் அடுத்த பிளான்

Admin

ஐ.பி.எல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகள் சேர்ப்பு..! 

News Editor

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு…..

naveen santhakumar