விளையாட்டு

அண்ணனுக்கு கொரோனா; வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட சவுரவ் கங்குலி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கங்குலியின் அண்ணனும் வங்காளக் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலருமான சினேகாசிஷ் கங்குலி (Snehasish Ganguly) கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவின் பெல்லி வியூ மருத்துவமனையில் (Belle Vue Hospital) அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  முதல் முறையாக 6 மொழிகளில் IPL ஏலம் வர்ணனை

அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுரவ் கங்குலியும் அவர் அண்ணனும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததால் சவுரவ் கங்குலி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் கங்குலி அண்ணனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3வது டி20யில் அசால்ட்டாக வெற்றி பெற்ற இந்திய அணி

Admin

கோலி, அனுஷ்கா குழந்தை இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அசத்தும் இந்திய அணி

Admin