நாகர்கோவிலில் கணவன் அழகாக இல்லை என கூறியதால் மனைவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சிவன் என்பவரோடு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிறுவயதிலேயே தாயை இழந்த 3 மகள்களையும் அர்ச்சனாவின் தந்தை கஷ்டப்பட்டு திருமணம் நடத்தி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அர்ச்சனா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அர்ச்சனா ஒல்லியாக இருந்தது கணவருக்கும், மாமியாருக்கும் பிடிக்கவில்லை எனவும், இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் குண்டாக அடிக்கடி கடைகளில் ஏதேனும் சாப்பிட வாங்குவதால் வீட்டில் சுவையாக சாப்பாடு செய்யவில்லை என அவர் கணவர் அடித்ததால் அர்ச்சனா மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. அழகாக இல்லை என கூறியதால் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.