தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
முதல்கட்டமாக ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்துள்ளது. இடைத்தரகர்கள் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 39 பேர் முதல் 100 இடங்கள் தரவரிசைக்குள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.