தமிழகம்

சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் 600 பேர் பட்டியல் ரெடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் சமர்பித்தது.

தமிழ்நாடு முழுவதும் திரட்டப்பட்ட 600 ஐபி முகவரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு நிச்சயம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தொழில்நுட்ப ரீதியிலான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

இதில் சென்னையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சியில் 60க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நெய்வேலி என்.எல்.சி.அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

News Editor

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்..

naveen santhakumar

தமிழ்நாட்டிலேயே தமிழில் பேச தடை: கொதித்தெழுந்த தொழிலாளர்கள்… 

naveen santhakumar