தூத்துக்குடி அருகே 18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த முதியவர் செய்த செயல் அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள ஆலங் கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டி என்பவர் தனது மனைவி இறந்த பிறகு 1979 ஆம் ஆண்டு மும்பை சென்று அங்கு கோயிலில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன்பின் 2000ம் ஆண்டு ஊர் திரும்பிய பூல் பாண்டி திருச்செந்தூர் பகுதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
தனக்கு கிடைத்தது போக மீதி உள்ள பணத்தை சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக கொடுத்து வந்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல உதவிகளை புல் பாண்டி செய்து வருகிறார்.
18 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் முதியவர் செய்யும் இந்த உதவியால் மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் நிகழ்ச்சி அடைந்துள்ளனர்.