தமிழகம்

சிறுவனுடன் சிறுமி ஓட்டம்…..செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்து மடக்கி பிடித்த சிறுமியின் தந்தை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தருமபுரி:

18 வயது காதலனுடன் சென்ற தனது 15 வயது மகளின் செல்போன் எண்ணை டிராக் செய்து இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளார் சிறுமியின் தந்தை.

தர்மபுரி மாவட்டத்தில் சிறை உதவியாளராக பணிபுரிந்து வருபவரின் 15 வயது மகள்,ஓட்டேரி பகுதி உள்ள உறவினர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் மகளுக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். 

ALSO READ  கால்டாக்ஸி விவகாரம்; ஓட்டுநரை கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் !

இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிறுமி காணாமல் போனதாக தகவல் வந்தது.இதனையடுத்து உடனடியாக சிறுமியின் தந்தை மகளின் செல்போனை டிராக் செய்து அந்த சிறுமியை ஓசூரில் மடக்கிப் பிடித்தார். அவர்கள் இருவரும் ஓசூரிலிருந்து கர்நாடகாவிற்கு தப்பிச் செல்வது தெரியவந்தது. 

பின்னர் சிறுமியை மீட்டு, சிறுவனை தலைமைச் செயலக காலனி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி..!

Admin

சாமான்ய மக்களின் தோழனாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..குவியும் பாராட்டுக்கள்..

naveen santhakumar

வேலை வாய்ப்பு… உடனே நாளைக்கு மிஸ் பண்ணாம போங்க!

naveen santhakumar