தமிழகம்

வழக்கறிஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீமநகர் பகுதியில்  வழக்கறிஞர் கோபிகண்ணன் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். 

அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு கோபிகண்ணன், ஹேமந்த்குமார் ஆகியோருக்கு இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கோபிகண்ணன் திட்டம் தீட்டி தந்ததின் பெயரில் 6நபர்களால் ஹேமந்த்குமார் கொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிவாங்கும் விதத்தில் கோவையில் வசித்து வரும்  ஹேமந்த்குமாரின் தம்பி பிரிஜேஸ்பிரசாந்த்(22தனது நண்பர்களான கோவையை சேர்ந்த சுரேஷ்(20), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த உதயகுமார்(23), நல்லதம்பி(27), அருண்(20), சித்திக்(19), ஆகியோர் சேர்ந்த இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. 

ALSO READ  சிறுவனின் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்ற நடிகர் அஜித்..!

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறை மரணம்: சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நல்லடக்கம்…

naveen santhakumar

மின்சார ரயில்களில் பயணிக்க அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் : முகக்கவசம் அணிந்து அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

News Editor

தேவர் ஜெயந்தி – தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை – ஆப்சென்டான ஓபிஎஸ், இபிஎஸ்?

naveen santhakumar