திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீமநகர் பகுதியில் வழக்கறிஞர் கோபிகண்ணன் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு கோபிகண்ணன், ஹேமந்த்குமார் ஆகியோருக்கு இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கோபிகண்ணன் திட்டம் தீட்டி தந்ததின் பெயரில் 6நபர்களால் ஹேமந்த்குமார் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் விதத்தில் கோவையில் வசித்து வரும் ஹேமந்த்குமாரின் தம்பி பிரிஜேஸ்பிரசாந்த்(22தனது நண்பர்களான கோவையை சேர்ந்த சுரேஷ்(20), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த உதயகுமார்(23), நல்லதம்பி(27), அருண்(20), சித்திக்(19), ஆகியோர் சேர்ந்த இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.