தமிழகம்

அம்மா உணவக பணியாளருக்கு கொரோனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கஜபதி தெருவில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  நாள்தோறும் அதிக அளவில் மக்கள் வந்து உணவு சாப்பிட்டு சென்றனர். இந்நிலையில், அம்மா உணவகத்தில் பணியாற்றிய 54 வயதுடைய பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ALSO READ  இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார்.  தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

அவருடன் தொடர்புடைய பலரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி அம்மா உணவகம் மூடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ALSO READ  உயிரைக் காத்த பெண் காவல் ஆய்வாளருக்கு சல்யூட் - கமல்ஹாசன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு !

News Editor

எளிய முறையில் திருமணம்.. மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழும் விஜயகாந்த்….

naveen santhakumar

தாங்க முடியாத துயரில் ஸ்டாலின்… மாபெரும் இழப்பு என ஆதங்கம்!

naveen santhakumar