தமிழகம்

கருணாநிதி வழங்கிய நிதியில் இருந்து சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு விருது…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கருணாநிதி வழங்கிய நிதியில் இருந்து 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேரின் பெயர் விவரங்களை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2007-ம் ஆண்டு தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.

ALSO READ  தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - தொடங்கிய ரயில் டிக்கெட் முன்பதிவு!

அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் சிறந்து விளங்கும் 2 எழுத்தாளர்களுக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி கவுரவித்து வருகிறது.

கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுபோன 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் சேர்த்து நடைபெறும்.

ALSO READ  மருத்துவமனையிலிருந்து தப்ப முயன்ற சிவசங்கர் பாபா கைது…!

விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.திவ்யதர்ஷினி



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ?- அமைச்சர் பொன்முடி …!

naveen santhakumar

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; மேடை நடன கலைத்துறையினர் சார்பில் மனு ! 

News Editor