கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார்.இதில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக 15 கேள்விகளுக்கும் சரியான விடையை கூறி கவுசல்யா என்ற மாற்று திறனாளி ரூ.1 கோடியை வென்றுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்த கவுசல்யா வாய் பேச முடியாமல் , காது கேட்காமல் இருந்து வருபவர்.இவர் தடைகளை மீறி எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரூ. 1 கோடிக்காக கௌசல்யா விடம் கேட்கப்பட்ட கேள்வியை கலர்ஸ் தமிழா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் ஒரு கோடிக்கான கேள்வியாக ,மன்னர் இரண்டாம் புலிகேசியின் கற்பனை இரட்டை சகோதரரான நாகநந்தி எனும் கதாபாத்திரம் 1948 -ன் எந்த வரலாற்று நாவலில் தோன்றுகிறது என்று கேட்கப் பட்டுள்ளது.
அதற்கு பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், சிவகாமியின் சபதம் மற்றும் யவன ராணி என்ற நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது.அதில் சிவகாமியின் சபதம் என்று சரியான விடையை தேர்வு செய்து கௌசல்யா ரூ. 1 கோடியை வென்றுள்ளார்.