தமிழகம்

பேரதிர்ச்சி… ஒரே நாளில் இப்படியா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஆயிரத்து 3 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் அது இருமடங்காக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 731பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 674 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 06 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  புதுச்சேரியில் மூன்றாவது நாளாக குறைந்து வரும் தொற்று !

நேற்று சென்னையில் 876 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்து 489 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோயம்புத்தூரில் 120 பேருக்கும் செங்கல்பட்டில் 290 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்றை பொறுத்த அளவில், தமிழ்நாடு முழுவதும் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 105 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவையில் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் சென்டர் துவக்கம் ! 

News Editor

தமிழகத்தில் 144 தடை – கலெக்டர் அதிரடி உத்தரவு!

naveen santhakumar

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த நடிகர் அஜித் பிறந்தநாள் HashTag….

naveen santhakumar