தமிழகம்

கேக் வெட்ட காதலன் வராததால் விரக்தியில் பெண் போலீஸ் தற்கொலை…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

விழுப்புரத்தை சேர்ந்த சரண்யா (22) அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காவலர் குடியிருப்பில் தங்கி, ரயில்வே போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பாரிமுனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணி செய்து வந்தார். 

சரண்யாவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரியும் ஏழுமலை என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏழுமலைக்கு பிறந்தநாள் என்பதால், அதை கொண்டாடுவதற்காக சரண்யா வேலை முடிந்து வரும்போது கேக் உள்ளிட்ட பரிசு பொருட்களை வாங்கி வந்துள்ளார். பின்னர், ஏழுமலைக்கு போன் செய்து கேக் வெட்ட அழைத்துள்ளார்.

ALSO READ  விழுப்புரம் மாவட்டத்திற்குள் தடை- ஆட்சியர் அறிவிப்பு…

ஆனால் பணி காரணமாக அவர் தற்போது வரமுடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சரண்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எஸ்ஐ சஜிபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை !

News Editor

தூக்கு போடுவது குறித்து விளக்கமளித்த புதுமாப்பிள்ளை பலி

Admin

1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

naveen santhakumar