மதுரையில் தூக்கு போடுவது எப்படி என விளையாட்டாக செய்து காண்பித்த புதுமாப்பிள்ளை கயிறு இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார்.
மதுரையில் லாரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சோலையழகுபுரத்தை சேர்ந்த முகமது அலி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த திருமண வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த முகமது அலி வீட்டில் இருந்த கயிறை எடுத்து எப்படி தூக்கு போடுவது என்பது குறித்து விளக்கமளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதில் எதிர்பாராதவிதமாக நாற்காலி நழுவியதால் முகமது அலி தூக்குக் கயிற்றில் மாட்டிக்கொண்டார்.
இதில் அவரது கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டாக செய்த காரியம் கடைசியில் புதுமாப்பிள்ளைக்கு வினையாக அமைந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.