தமிழகம்

தூக்கு போடுவது குறித்து விளக்கமளித்த புதுமாப்பிள்ளை பலி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரையில் தூக்கு போடுவது எப்படி என விளையாட்டாக செய்து காண்பித்த புதுமாப்பிள்ளை கயிறு இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார்.

மதுரையில் லாரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சோலையழகுபுரத்தை சேர்ந்த முகமது அலி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த திருமண வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த முகமது அலி வீட்டில் இருந்த கயிறை எடுத்து எப்படி தூக்கு போடுவது என்பது குறித்து விளக்கமளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் !

இதில் எதிர்பாராதவிதமாக நாற்காலி நழுவியதால் முகமது அலி தூக்குக் கயிற்றில் மாட்டிக்கொண்டார்.

இதில் அவரது கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டாக செய்த காரியம் கடைசியில் புதுமாப்பிள்ளைக்கு வினையாக அமைந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !

News Editor

கூடிய விரைவில்….சூடான…சுவையான….. மோடி இட்லி வித் சாம்பார்…….

naveen santhakumar

என்னை இனி ‘தல” என்று அழைக்க வேண்டாம் – அஜித்குமார்

naveen santhakumar