சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என கூறிருந்தனர். இந்நிலையில் அவர் வரும் தேதி மாற்றப்பட்டு பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருவார் என தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சசிகலா 7 ஆம் தேதி தமிழகம் வருவதாக கூறப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாதன் ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.