கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பலரும் கேள்வி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது அடுத்து இன்று மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். அதில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியாக ஆலோசனையை நடத்திய நிலையில் ஊரடங்கை நீட்டிக்க அணைத்து கட்சி எம்.எல்.ஏவும் ஆதரவு அளித்துள்ளனர்.