சென்னை போக்குவரத்து காவல் துறையில் புதிதாக சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும். இந்த வாகனம் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது,இதில் 48 வோல்ட் 12ஆம்ஸ் பொருத்தப்பட்டு Self Balancing Automatic Dynamic Stability. இந்த வாகனத்தின் எடை 58 கிலோ . இந்த வாகனம் 6 முதல் 7 மணிநேரம்
வரை இயங்கக்கூடியது, இந்த வாகனத்தில் Digital Speedometer மற்றும் Wireless Remote Control உள்ளது. இந்த வாகனம் 360 டிகிரி சுழலக்கூடியது.
மேலும் இந்த வாகனத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் செல்ல முகப்புவிளக்கும் பின்புறம் சிவப்புவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாககூடும் இடத்தில், நடைபாதையில் சென்றும் போக்குவரத்தையும், மக்களையும் ஒழுங்குபடுத்த மிகவும் உதவியாக இருக்கும்.தற்போது, இந்த சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் ஒத்திகைக்காக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.